/* */

Holiday for Schools Colleges-சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்கள், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை

Holiday for Schools Colleges- கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Holiday for Schools Colleges-சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்கள், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை
X

Holiday for Schools Colleges- கனமழை காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு ( கோப்பு படம்)

Holiday for Schools Colleges, 4 Districts, Puducherry- தமிழகத்தில் வரும் 4-ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை மறுநாள் புயலாக மாறி டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது

தற்போது, மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 -ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது புதுச்சேரி அரசு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலை தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் 4 -ம் தேதி புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 2 Dec 2023 3:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.