/* */

தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்

5 மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்
X

தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு

1.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 குடும்பங்களைச் சார்ந்த 128 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,

2. திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 குடும்பங்களைச் சார்ந்த 71 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

3. செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 குடும்பங்களைச் சார்ந்த 79 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

4. திருவள்ளூர் மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சார்ந்த 36 நபர்கள் 1 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேத விபரம்:

கடந்த 24 மணி நேரத்தில், சென்னை , தேனி, மதுரை மாவட்டங்களில் 4 நபர்கள் உயிரிழந்துள்னர். மேலும், 16 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 263 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Updated On: 8 Nov 2021 7:24 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!