/* */

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

HIGHLIGHTS

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்
X

நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுவது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நுழைவு வரியினை ரத்து செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் முறையாக வரி செலுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த கருத்து தொடர்ந்து நடிகர் விஜய், தனி நீதிபதியின் எதிர்மறையான கருத்துகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். முன்னதாக விஜய்யின் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கம்செய்யக் கோரி ஏன் சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே கோரிக்கை வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் மீது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறை கருத்துகள் நீக்கப்படுவதாக வழக்கில் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Updated On: 25 Jan 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...