/* */

பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு மிஸ்ஸிங்.. அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்...

தமிழ்நாடு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஆளுநர், பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும் அதை தவிர்த்து உள்ளார்.

HIGHLIGHTS

பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு மிஸ்ஸிங்.. அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்...
X

ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் ஆளுநர் ரவி நேற்று கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை தான் ஆளுநர் சட்டப்பேரவையில் வாசிப்பது வழக்கம். ஆனால், நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த சில அறிக்கையில் சில வார்த்தைகளை ஆளுநர் ரவி தனது பேச்சில் தவிர்த்தார்.


ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், ஆளுநர் தவிர்த்த வார்த்தைகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார். அப்போது ஆளுநர் திடீரென அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் விருந்து வழங்கப்படுவது உண்டு. அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையில் பொங்கல் திருவிழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அழைப்பிதழை வெளியிட்டு உள்ளது. ஆனால், பொங்கல் விழா அழைப்பதழிலும் ஆளுநர் பல்வேறு விஷயங்களை தவிர்த்து உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேநீர் விருந்து தொடர்பான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லோகோ இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற முத்திரைக்குப் பதிலாக அசோகா சக்கரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற வார்த்தையை தொடர்ந்து ஆளுநர் தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த செயலர் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.

Updated On: 11 Jan 2023 7:22 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்