/* */

விநாயகர் சதுர்த்தி விழா விற்பனை இல்லை -கவலையுடன் காத்திருக்கும் வியாபாரிகள்

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் நிலையில், அதற்கான பொருட்கள் விற்பனை வெகு மந்தமாக உள்ளதாக விற்பனையாளர்கள் கவலை.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழா விற்பனை இல்லை    -கவலையுடன் காத்திருக்கும் வியாபாரிகள்
X
வாங்குவோர் இன்றி காணப்படும் காஞ்சிபுரம் காய்கறி சந்தை.

முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் கொரோனா பரவல் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொது இடங்களில் இந்த ஆண்டும் விநாயகர் சிலை வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பொருட்கள் விற்பனை ஆகவில்லை என்பதால் சாலையில் கவலையுடன் காத்திருக்கும் பெண்மணி.

மேலும் களிமண் சிலையில் விநாயகர், வண்ண வண்ண விநாயகர் சிலை, குடை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகள் காஞ்சிபுரம் நகரின் பல பகுதிகளில் சிறு வியாபாரிகளால் விற்கப்பட்டு வருவது வழக்கம்.

விற்பனை இல்லை.. கவலையுடன் மலர்களை விற்கும் பெண்மணி.

கூட்ட நெரிசலை தவிர்க்க, பொதுமக்கள் அதிகாலையிலே முதலே இந்த பொருட்களையும், விநாயகர் சிலைகளையும் வாங்க வருவது வழக்கம், அப்போது சந்தையில் அங்காடிகள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும், வியாபாரிகளும் சுறுசுறுப்பாக இயங்குவதை காணமுடியும்.

ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் கெடுபிடி காரணமாகவும் இன்று பொதுமக்கள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து விட்டதால் பெருத்த ஏமாற்றத்துடன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இன்றும், நாளையும் தொடர் திருமண நாட்கள் என்பதால் பொதுமக்கள் திருமணங்களில் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளதால் மாலையில் பொது மக்கள் வரக்கூடும் எனும் நம்பிக்கையில் வியாபாரிகள் காத்திருக்கின்றனர். இந்த காட்சிகள் காண்பவரை கவலை கொள்ளச் செய்தது.

வெறிச்சோடி காணப்படும் கடைகள்.. கவலையுடன் வியாபாரிகள்.


Updated On: 9 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு