மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
விழாவில் கலந்து கொண்ட மகாகவி பாரதியாரின் குடும்பத்தினர் மத்திய இணையமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மகாகவி பாரதியாரின் முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் நேற்று திறந்து வைத்தார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிலை திறப்பு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட மகாகவி பாரதியாரின் குடும்பத்தினர் மத்திய இணையமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு நடந்த கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் பரிசு வழங்கினார். தொடர்ந்து, நடந்த தேனீர் விருந்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu