/* */

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

பொண்ணை ஆறு 

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மழை பெய்ததால் அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக நிரம்ப உள்ள நிலையில், தற்போது ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வேலூர் மாவட்ட எல்லையில் நுழைந்துள்ள நீர் விரைவில் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொன்னை ஆற்றங்கரையில் இருபுறமும் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து வருவாய்த் துறையினர் தண்டோரா மூலமும், ஆட்டோக்கள் மூலமும் இத்தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருப்பதாகவும் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவது, இந்த ஆற்றின் மூலம் விவசாய பாசனம் பெறும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Jun 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  2. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  3. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  4. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  5. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  6. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!