குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பக்கம் செல்லாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture