/* */

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல்

2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

HIGHLIGHTS

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல்
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றவை:

*ரூ.9370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது

*ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும்

*நடப்பு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு

*அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும்

*நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு

*ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்

*பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்

*அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும் - உலக வங்கி உதவி பெறப்படும்

*பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் காவிரி டெல்டாவில் செயல்படுத்தப்படும்

*நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3ம், 4ம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்

*ரூ.6000 கோடி மதிப்பில் இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

*மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு

*ரூ.6.25 கோடி செலவில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு

*காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்

*மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.433.97கோடி

*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக் கோடு சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

*மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ.143 கோடி ஒதுக்கீடு

*ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்

*ரூ.100 கோடி செலவில் ஈர நிலங்கள் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை

*குறைந்தபட்சம் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் அறியும் வசதி ஏற்படுத்தப்படும்

*திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்குள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும்

*79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

*கிராமங்களில் அமைந்துள்ள 1.27கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

*83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை

*2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டப்படும்

*கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வீடுகள் கட்டித்தரப்படும்

*கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3548 கோடி ஒதுக்கீடு

*ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ₹400 கோடி ஒதுக்கீடு

*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹3 கோடி மீண்டும் அளிக்கப்படும்

*கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

*கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ₹100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

*ரூ1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

*ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள்

*100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் ஊதியத்தை ரூ300 வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தும்

*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கொரோனா சிறப்பு கடன் உட்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்

*திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்

*வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும்.

*மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்

*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்

*ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த இயக்கம் ஒன்று உருவாக்கப்படும்

Updated On: 13 Aug 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  10. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி