/* */

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: 85 வயது விவசாயி தீக்குளித்து தற்கொலை

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூர் அருகே திமுக அலுவலகம் முன்பு 85 வயது விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: 85 வயது விவசாயி தீக்குளித்து தற்கொலை
X

விவசாயி தங்கவேல்

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவர் தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை அடுத்த தாழையூரில் உள்ள திமுக அலுவலகம் முன்பு திமுக முன்னாள் விவசாய சங்க அமைப்பாளர் தங்கவேல் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தார்.

காலை 11 மணியளவில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தி.மு.க.வின் தீவிர உறுப்பினரான தங்கவேல், ஹிந்தியை கல்வி ஊடகமாக கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தங்கவேல் ஒரு பேனரில், "மோடி அரசே, மத்திய அரசே, எங்களுக்கு இந்தி வேண்டாம். நம் தாய்மொழி தமிழ், இந்தி கோமாளிகளின் மொழி. இந்தி மொழியை திணிப்பது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள்" என எழுதியிருந்தார்

தமிழகத்தின் மீது இந்தி திணிக்கப்பட்டால், பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து தேசிய தலைநகரில் அக்கட்சி போராட்டம் நடத்தும் என தமிழக ஆளும் கட்சியான திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வருமான ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்

மேலும், மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்தால் வாய்மூடி மௌனமாக இருக்க மாட்டோம் என அக்கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கும் ஊடகம் இந்இவாகவும் நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததை அடுத்து போராட்டம் வெடித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

Updated On: 26 Nov 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது