/* */

தேர்தல் தகராறு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது

தேர்தல் தகராறில் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் தகராறு  வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை, சென்னை மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில், வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி ஒருவரை தாக்கிய புகார் மீது தண்டையார்பேட்டை போலீசார் , இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தேர்தல் நாளன்று, வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டை பகுதியில் ஒரு வார்டில், திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக்கூறி, ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அதிமுகவினரும், அவரை தாக்கியதாக, திமுகவினர் குற்றம்சாட்டினர்.

மேலும், தாக்கப்பட்டவரின் சட்டையை கழட்டி, கையை பின்புறம் கட்டி அவரை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனிடையே, ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் மாற்றுக் கட்சியினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தற்போது ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது , அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 Feb 2022 12:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!