/* */

போதைப் பொருட்கள் விற்பனை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

பள்ளி,கல்லூரி அருகே போதைப் பொருட்களை விற்றால் கடுமையான தண்டனைகள் வழங்க சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

HIGHLIGHTS

போதைப் பொருட்கள் விற்பனை: தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
X

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

பள்ளி,கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை கடுமையான தண்டனைகள் வழங்க சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்றப் பேரவையில், வினா விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து,இப்போதுவரை வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பதிலளித்தார்.

இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு அ செய்யப்பட்டிருக்கின்றன. 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15 பேர் குண்டர் சட்டத்திலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3,413 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்திலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோ.க. மணி சொன்னதுபோல, ஏற்கெனவே போதை மற்றும் மன மயக்கப் பொருட்கள் தடைச் சட்டம் 1985 ன் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க அந்தச் சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இதுகுறித்து பரிசீலித்து, ஆராய்ந்து, என்னென்ன வகையிலே அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ, அதைப் பரிசீலித்து, அவர்களுக்குரிய ரிவார்டு நிச்சயம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Updated On: 31 Aug 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.