Begin typing your search above and press return to search.
அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்போது வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மொத்தம் 207 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாகியுள்ளது.பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது