prawn in tamilஇறால் மீன் உண்பதற்கு ஏற்ற காலம் எது தெரியுமா?

prawn in tamilஇறால் மீன் உண்பதற்கு ஏற்ற காலம் எது தெரியுமா?
X
prawn in tamilஇறால் மீன் (கோப்பு படம்).
prawn in tamilஇறால் மீன் உண்பதற்கு ஏற்ற காலம் எது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

prawn in tamilநாம் அன்றாட வாழ்வில் சைவம், அசைவம் என இருவகையான உணவுகளை உண்கிறோம். உலக அளவில் அசைவ உணவு உண்பவர்களே அதிக அளவில் உள்ளனர். அசைவ உணவிலும் கடல் வாழ் உயிரினங்களான மீன் அதிக புரத சத்து மிகுந்த உணவாக கருதப்படுகிறது. மீன் வகைகளில் இறால் ஒரு ஆரோக்கியமான உணவாகும். மேலும் அதிகமான மக்கள் விரும்பக்கூடிய ஒரு உணவாக இறால் உள்ளது. இறால் மீனை மழைக்காலம் உண்பதால் பல பாதகங்கள் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

prawn in tamilஉண்மையில் பருவமழை காலம் ஒரு இதமான காலம்தான். அது மறுப்பதற்கில்லை. வெயிலின் வெப்பத்தில் இருந்து பூமியை குளிராக்கவும் நமது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் பருவமழையானது நமக்கு உதவுகிறது. மேலும் அப்போது வரும் மண் வாசனையானது மனதுக்கு இதம் அளிப்பதாக உள்ளது. தொடர்ச்சியான லேசான மழை, எப்போதும் மந்தமாக இருக்கும் வானம். மிதமான குளிர். இதற்கு நடுவில் கொஞ்சம் காரமான சூடான இறால் வறுவலை உண்ண கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.


ஏனெனில் அந்த பருவமழை சூழ்நிலையானது நம்மை வறுத்த உணவுகளுடன் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க தூண்டுகிறது. ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் நன்மை இருக்கும்போது கண்டிப்பாக தீமையும் இருக்கும். மழைக்காலம் சில ஆரோக்கிய சிக்கல்களை கொண்டுள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நீர் மூலம் பரவும் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏதுவான காலமாக மழைக்காலம் உள்ளது. மேலும் இந்த பருவ நிலை மாற்றம் நமது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

prawn in tamilஎனவே இந்த மாறுபாடுகளுக்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதாரண நாட்களில் இறால் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பருவமழை காலத்தில் இறால் சாப்பிடலாமா என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

prawn in tamilபருவ மழை காலங்களில் உடலில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே இந்த காலங்களில் பருவகால பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சிற்றுண்டிகளாக எடுத்துக்கொள்வது நல்லது.

prawn in tamilஆனால் கடல் உணவு என்று வரும்போது அதில் நீங்கள் கூடுதல் கவனமாக இருப்பது முக்கியமாகும். இறால்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை பயக்க கூடியவை. அவை அதிகமான அளவில் புரதச்சத்தை கொண்டுள்ளன. மேலும் நன்றாக சமைக்கும் போது அது அருமையான சுவையை அளிக்கிறது. கடலோர பகுதிகளில் உள்ளவர்களுக்கு இறால் எளிதாக கிடைக்கலாம். இப்போது இருக்கும் தொழில்நுட்பம் காரணமாக கடல் உணவுகள் நல்ல முறையில் சேமிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் சமைக்கப்படுகின்றன.


prawn in tamilஇந்த பருவ காலமானது செரிமான பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் இந்த சமயத்தில் நாம் கொஞ்சம் கவனமுடன் உணவுகளை உண்ண வேண்டி உள்ளது. எனவே குறைவான செரிமான சக்தி கொண்டவர்கள் இந்த மழைக்காலங்களில் முடிந்த அளவு அசைவ உணவுகளை தவிர்க்கலாம். ஆனால் அனைவருமே கடல் உணவுகளை மழைக்காலத்தில் உண்ணாமல் இருப்பது நல்லது.

prawn in tamilஉண்மையில் மழை காலத்தில் கடல் உணவுகளை உண்பது பெரிதாக உடலை பாதிக்காது என்றாலும் அது அவைகளுக்கான இனப்பெருக்க காலமாகும். பல உயிரினங்களுக்கு இனப்பெருக்க காலம் என்று ஒன்று இருக்கும். இது பல கடல் வாழ் உயிரினங்களுக்கு பொருந்தும். இந்த இனப்பெருக்க காலத்தில்தான் இவை அதிகமாக குஞ்சு பொறிக்கும். எனவே பல நாடுகள் குறிப்பிட்ட மாதங்களை மீன் மற்றும் இறால் பிடிப்பதற்காக தடை செய்துள்ளது.

prawn in tamilமழை காலத்தில்தான் இறால் இனப்பெருக்கம் செய்யும். இதனால் மழைக்காலத்தில் இறால் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்க அசைவ உணவுகளை தவிர்த்து நாம் விதைகள் நட்ஸ் போன்றவற்றை உண்ணலாம்.

இந்த பருவமழையானது நமது உடலில் செரிமான சக்தியை வெகுவாக குறைக்கிறது. இறாலில் உடலுக்கு நன்மை பயக்க கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பது உண்மைதான். ஆனால் நாம் இந்த மழைக்காலத்தில் மட்டும் அவற்றை நட்ஸில் இருந்து பெற முயற்சிக்கலாம்.

prawn in tamilஒரு புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் இது குறித்து கூறும்போது "இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். ஒருவர் அறிவியலின் நடவடிக்கைகளை நம்புபவர். தனது செயல்பாடுகளையும் முடிவுகளையும் தர்க்கரீதியாக விவாதம் அல்லது ஆய்வுக்கு உட்படுத்தியே எதையும் முடிவு செய்வார். ஆனால் இரண்டாமானவர் கட்டுகதைகளை நம்புபவர். அவர் முந்தைய தலைமுறையினரின் கட்டுகதைகளை நம்புவார்.

prawn in tamilமழைப்பருவங்களில் கடல் உணவுகளை உண்ண கூடாது என கூறியும் ஆசிய நாடுகளில் பலர் அதை பொருட்படுத்தாமல் கடல் உணவுகளை பருவ காலங்களிலும் உண்கின்றனர். இவர்கள் இந்த இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் அறிவியலை நம்புவதே இல்லை என அவர் கூறுகிறார்.

prawn in tamilஅறிவியல் ஆய்வுகளின்படி பருவமழை காலமானது கடல் உயிரினங்களுக்கான இனப்பெருக்க காலமாகும். எனவே அந்த காலக்கட்டத்தில் அவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது. இந்த காலக்கட்டத்தில் நாம் இறாலுக்கு பதிலாக வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வளர்ப்பு கெண்டை, அல்லது கோழி இறைச்சி போன்றவற்றை உண்பது மூலம் நமது அசைவ விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே பருவமழை காலங்களில் இறால் மட்டுமின்றி மற்ற கடல் உணவுகளையும் உண்பதை தவிர்க்கவும்.

ஏனெனில் இனப்பெருக்க காலத்தில்தான் கடல் உயிரினங்கள் பெருகுகின்றன. பிறகு பிறந்த குஞ்சுகள் வளர்கின்றன. அப்படி இனம் பெருகும்போதுதான் நமக்கு எப்போதும் கடல் உணவுகள் கிடைத்துக்கொண்டிருக்கும்.

prawn in tamilநாம் இனப்பெருக்க காலங்களில் அவற்றை பிடிக்கும்போது அவை அதிகப்பட்சம் கர்ப்ப நிலையில் இருக்கும். நாம் அவற்றை பிடித்தால் இந்த குஞ்சுகள் அல்லது முட்டைகள் அனைத்தும் கருவிலேயே இறந்துவிடும். இதனால் அடுத்த வருடத்திற்குள் கடலில் குறிப்பிட்ட இடத்தில் அவை அதிகமாக இல்லாமல் போய்விடும். இந்த நிலை வராமல் இருக்க நாம் அவற்றை பருவமழை காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும் என்பதே சிறந்ததாகும்.

Tags

Next Story