Begin typing your search above and press return to search.
தி.மு.க. செய்வது லேபிள் ஒட்டும் வேலை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தி.மு.க. செய்வது லேபிள் ஒட்டும் வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
HIGHLIGHTS
சென்னையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழக்கு ஒன்றில் கைதாகி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். அவர் திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தி.மு.க.அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. வழக்கம்போல் அல்வா கொடுக்கும் வேலையைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள்.இந்த தி.மு.க. அரசு எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைத்தான் செய்து வருகிறது என்றும் கூறினார்.