/* */

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது

தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில்  கைது
X

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பள்ளி மாணவியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அமரப்பூண்டியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் நாட்ராயன்(30) என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் நாட்ராயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் நாட்ராயன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 28 Nov 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு