/* */

குப்பைகளுக்கு தீ: விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே நெய்காரபட்டியில் குளக்கரையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்

HIGHLIGHTS

குப்பைகளுக்கு தீ: விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
X

குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி பேரூராட்சி மற்றும் அ.கலையமுத்தூர் ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் இப்பகுதியில் உள்ள சர்க்கரை வண்ணான் குளத்தின் கரையில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து இரும்புகம்பி மற்றும் பிற பொருட்களை பிரிப்பதற்காக சிலர் குப்பைகளுக்கு தீவைத்து விடுகின்றனர்.

இதன் காரணமாக துர்நாற்றத்துடன் சேர்ந்து அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி‌அளிக்கிறது. மேலும் பழனியில் இருந்து நெய்க்காரபட்டி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. குளத்தின் சுற்றுச்சூழலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குளக்கரைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், குப்பை கொட்டுவதற்கு தனியாக இடத்தை ஏற்படுத்தியும் , மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து உரத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Sep 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...