/* */

பழனி அருகே அரசு பேருந்து, லாரி நேருக்குநேர் மோதல்: 3 பேர் பலி

பழனி அருகே, அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

பழனி அருகே அரசு பேருந்து, லாரி நேருக்குநேர் மோதல்: 3 பேர் பலி
X

விபத்தில் காயமடைந்து பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்.

பழனியை அடுத்துள்ள தாழையூத்து அருகே, அரசு பேருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று, அரசு பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து பலத்த சேதமடைந்தது. பேருந்து மீது மோதிய லாரி சாலையில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாமிநாதபுரம் போலீஸார், பேருந்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி டிரைவர் ராஜேஷ் உட்பட, 20 க்கும் மேற்பட்டோரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணையில், இறந்த மூவரில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பதும், இன்னொருவர் அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருக்கிரபாண்டி என்பதும் தெரியவந்தது. இறந்த மூன்றாவது நபரின் விபரம் குறித்தும் விபத்து குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...