/* */

பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம்

ஊரடங்கு தளர்வு காரணமாக, பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் இன்று திறக்கப்பட்டது. முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கொரானா காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில், இன்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன், படிவழிப்பாதையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில், காலை 6மணிமுதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அன்னதானம், ரோப்கார் ஆகிய சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மின்இழுவை ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்களும் வழங்காமல் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் பதிவுசெய்து வரும் பக்தரகளை, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப் படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்குடன், முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Updated On: 5 July 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்