கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி : தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தகவல்

கொடைக்கானல் பூங்கா
கொடைக்கானல்:
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொடைக்கானலில் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , ரோஜா பூங்கா , செட்டியார் பூங்கா உள்ளிட்டவை நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்க அனுமதிக்கப்படும் என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவித்தும் இபாஸ் மற்றும் இ ரிஜிஸ்ட்டேசன் முறைகளை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை நம்பியே இருந்த கொடைக்கானலில் முதற்கட்டமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டும் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , ரோஜா பூங்கா , செட்டியார் பூங்கா உள்ளிட்டவை நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்க அனுமதிக்கப்படும் என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கொடைக்கானல் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu