/* */

கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை
X

கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.மலைப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன் சீசன் துவங்கியது. ஊரடங்கால் இவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நீடித்தது. நாட்டு பேரிக்காய், சர்க்கரை, வால் பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய் ரகங்கள் உள்ளன. பறிக்கப்படும் பேரிக்காய்கள் கேரளா, கொடைரோடு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. துவக்கத்தில் கிலோ ரூ.15 க்கு விற்றது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் வரத்து குறைந்தும் விலை உயர்வின்றி கிலோ ரூ. 12 க்கு விற்கிறது. நடப்பாண்டில் விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.இது குறித்து சௌந்தரபாண்டியன் கூறுகையில்,'' நடப்பாண்டில் தொடர் மழை, சில வாரங்களாக சூறைக்காற்றால் மகசூல் பாதித்தது. கடந்த ஆண்டு கிலோ ரூ.30 க்கு விற்றது. இந்தாண்டு விலை வீழ்ச்சியால் காய்களை பறிக்காமல் விடப்பட்டுள்ளது'', என்றார்.

Updated On: 3 Aug 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...