/* */

அரசு பஸ்சில் பயணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம்: அதிகாரி அதிரடி உத்தரவு

கொடைக்கானலில், உள்ளூர்வாசிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது, ஆதார் அட்டையை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று, போக்குவரத்து கழக மேலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு பஸ்சில் பயணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம்: அதிகாரி அதிரடி உத்தரவு
X

கொடைக்கானலில், அரசு பேருந்தில் உள்ளூர்வாசிகள் பயணம் செய்வதற்கு ஆதார் அட்டை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளை பரிசோதிக்கும் அதிகாரிகள்.

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கில் இன்று முதல், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன. அதே நேரம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலம் என்பதால், அங்கு சுற்றுலாப்பயணி வருகைக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளியூர் நபர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில், கொடைக்கானல் மக்கள் பயணம் மேற்கொள்ளும் போது, கட்டாயம் ஆதார் அட்டை காண்பித்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று, கொடைக்கானல் போக்குவரத்து கழக மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 28 Jun 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!