முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது

பழனி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையில், வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களுடன் காட்டுப்பகுதிக்குள், சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆடிப்பெருக்கு திருவிழாவுக்காக, ஒரே சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் வேட்டையில் ஈடுபடுவதும், தற்போது பழனி பகுதியில் வேட்டையில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரியவந்தது.
மேலும், வேட்டையாடும் முயல்களை திருச்சி மாவட்டம், வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் வழக்கம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 26 வேட்டை நாய்களுடன் 46 பேரை கைதுசெய்த வனத்துறையினர், வேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு; இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu