/* */

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
X

பழனி முருகன் கோயிலில் 2021 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலை மீது செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் படிபாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மலைக்கோயிலில் கட்டண மற்றும் இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.

மேலும் மலை மீதுள்ள முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மலை அடிவாரம், சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர். மலைஅடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி முருகன் , கோவில் பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Updated On: 1 Jan 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  3. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  8. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  10. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி