/* */

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்
X

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில்  ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 288 பகுதி நேரக்கடைகள் ஆக மொத்தம் 1,035 நியாயவிலைக்கடைகளில் உள்ளது. இதில் 6,64,970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- 2022 வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உடனிருந்தனர்.

Updated On: 25 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை