/* */

ஒட்டன்சத்திரம்: ஆபத்தான மின் கம்பம்- அதிகாரிகள் மெத்தனம்

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன குளத்தருகில், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்யாமல், மின் வாரியத்தினர் அலட்சியமாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட, சின்னக்குளம் பகுதி வழி செல்லக்கூடிய தார்சாலையில், அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளுக்கு இச்சாலை வழியாக, இருசக்கர வாகனங்களிலும், நடைபாதை ஆகவும் பலரும் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், பழுதடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் அபாய நிலையில் உள்ளது பற்றி மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தும், மாற்றித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அந்த மின் கம்பத்தை அகற்றி, உயிர்பலி ஏதும் ஏற்படாத வகையில், பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...