ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழை.

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, வெரியப்பூர், கேதையுறும்பு, அத்திக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுமார் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture