/* */

தொடர்மழையால் திராட்சை பழங்கள் அழுகி வீணாகும் நிலை: விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர்

HIGHLIGHTS

தொடர்மழையால் திராட்சை பழங்கள் அழுகி வீணாகும்  நிலை: விவசாயிகள் வேதனை
X

தொடர் மழையால் திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் வெடித்துச்சிதறும் திராட்சை பழங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழையால் திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது .சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுகின்றன .

வழக்கமாக திராட்சை சாகுபடியின்போது ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும் . இதற்காக விவசாயிகள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து உரம் , பூச்சி மருந்து தெளித்து சாகுபடி செய்து இருந்தனர் .இந்தநிலையில் திராட்சை பழங்கள் மழையால் அழிவுக்கு உள்ளாகியதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர் . இதனால் திராட்சை விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .எனவே விவசாயிகள் திராட்சை பழங்களை மாடுகளுக்கு தீவனமாக வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது .

Updated On: 17 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!