/* */

கோழிக்கழிவு கொட்ட வந்த டிப்பர் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நத்தம் அருகே பாப்பாரப்பட்டியில், குப்பை மற்றும் கோழி கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரியை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோழிக்கழிவு கொட்ட வந்த டிப்பர் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
X

லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

நத்தம் அருகே பாப்பாரப்பட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் கொட்டுவதற்காக, நத்தம் பேரூராட்சி பகுதியில் இருந்து குப்பை, கோழிக்கழிவுகளுடன் டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.

குப்பையை கொட்டும்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், இரவில் கழிவுடன் வந்த லாரியை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்களிடம் இனி கழிவுகள் இங்கு கொட்டப்படாது எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். குப்பை மற்றும் கழிவுடன் டிப்பர் லாரி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 8 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்