/* */

அகதிகள் முகாமிற்கு நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

கிராமப்பகுதியில் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை.

HIGHLIGHTS

அகதிகள் முகாமிற்கு நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செங்குறிச்சி அருகே உள்ளது பூசாரி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாய கூலியாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உழவு செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கிராம மக்களின் ஆடு, மாடு மேய்ச்சல் நிலங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது அதே பகுதியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டி தருவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி மன்றம் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை பட்டா போட்டுக் கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிராமப்பகுதியில் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!