/* */

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு

நத்தம் அருகே, தொடக்கப்பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது; உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு
X

பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி, பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது, 2 கட்டிடங்களில் செயல்படுகிறது . இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, நேற்று பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

அப்போது, சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டர் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நத்தம் தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சத்துணவு மையத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.

துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் நாளே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’