/* */

பூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள் வேதனை

திண்டுக்கல்லில் பூக்கல் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் சில்லறை விற்பனை மந்தமாக உள்ளது.

HIGHLIGHTS

பூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள் வேதனை
X

திண்டுக்கல் மலர் சந்தை

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, வெள்ளோடு, செம்பட்டி, மயிலாப்பூர், ஆவாரம்பட்டி, தாடிக்கொம்பு, கோவிலூர், பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,

இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் பூக்களின் வரத்துகேற்ற நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் பூக்கள் விலை கிடைத்த போதிலும், அதை வாங்கி சில்லரை விற்பனை செய்பவர்களுக்கு விலை கிடைத்தாலும் விற்பனை அதிகளவில் இல்லை. கடந்த காலங்களில் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும் என்பதால் பூக்களில் வரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதோடு அதிகமான விற்பனையும் நடைபெறும்.

ஆனால் தற்போது கோவில்களில் வழிபாட்டிற்கு திறந்தபோதிலும் ஆடி மாத திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லாததால் பூக்கள் விலை கிடைத்தும் விற்பனை குறைவாக உள்ளதாக சில்லரை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கடைகள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் பூ வியாபாரிகளுக்கும் அரசு பரிசீலனை செய்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இன்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 250 ரூபாய்க்கும் , சம்பங்கி 100 ரூபாய்க்கும், ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 80 ரூபாய்க்கும், துளசி ஒரு கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனையானது.

Updated On: 23 July 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...