/* */

திருக்கோவிலின் வாசலை மூடுதல் முறையோ?: வருத்தத்தில் மணமக்கள்

டாஸ்மாக் உள்ளிட்ட பல கடைகள் திறந்துள்ள நிலையில் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

திருக்கோவிலின் வாசலை மூடுதல் முறையோ?: வருத்தத்தில் மணமக்கள்
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டிய கேட்டின் முன் நின்று தாலி கட்டிக் கொண்ட மணமக்கள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டிய கேட்டின் முன் நின்று தாலி கட்டிக் கொண்ட மணமக்கள். பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவிலை திறக்க திருமண வீட்டார், பொதுமக்கள் கோரிக்கை.

தமிழக அரசு நோய் தொற்று காலம் என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆலயங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் முதல் முகூர்த்தம் என்பதால் திருமண வைபவங்கள் இன்று பெரும்பாலான இடங்களில் மண்டபங்களில் நடைபெற்றது.

ஒரு சிலர் கோவில்களில் நடத்த திட்டமிட்டுருந்த நிலையில் அரசின் மூன்று நாள் ஆலயங்கள் திறக்கக் கூடாது என்ற அறிவிப்பால் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டு இருந்த கேட்டின் முன் நின்று உறவினர்கள் புடைசூழ மிகவும் எளிமையாக மணமக்கள் தாலி கட்டிக் கொண்டனர்.

கோவில் பூட்டப்பட்டு இருந்த நிலையில் நடைபெற்ற இந்த திருமணம் பக்தர்கள், பொது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் டாஸ்மாக் உள்ளிட்ட பல கடைகள் திறந்துள்ள நிலையில் ஆலயங்களை மட்டும் பூட்டி வைப்பது எந்த விதத்தில் நியாயம். உடனடியாக பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 20 Aug 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  7. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  9. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை