திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பல மடங்கு விலை உயர்வு: மல்லிகை பூ கிலோ ரூ. 2,500

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில்  பல மடங்கு  விலை உயர்வு: மல்லிகை பூ கிலோ ரூ. 2,500
X

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனை வந்த மல்லிகை பூக்கள்

மழைப் பொழிவின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே கொண்டு வரப்படுகிறது

தொடர் சுப முகூர்த்தம் மற்றும் மழையின் காரணமாக . திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விலை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. மல்லிகை பூ௧ கிலோ 2.500க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு திண்டுக்கல் அருகே உள்ளசின்னாளபட்டி, செம்பட்டி, கொடை ரோடு ,வெள்ளோடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள். இங்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதற்கிடையே தொடர் சுபதினங்கள் மற்றும் மழைப் பொழிவின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே கொண்டு வரப்படுகிறது.இதன் காரணமாக பூக்களின் விலை கிலோவுக்கு பின்வரும் விலைக்கு உயர்ந்துள்ளது.

மல்லிகை பூ - ரூ. 2500 முதல்., முல்லை பூ - ரூ. 1000 முதல்., கனகாம்பரம் - ரூ. 1500 முதல்., ஜாதிப் பூ - ரூ. 500. செவ்வந்தி - ரூ. 160. சம்பங்கி -ரூ. 220. அரளி - ரூ. 250. கோழி கொண்டை - ரூ.100. செண்டு மல்லி - ரூ. 100. ரோஸ் -ரூ. 150-க்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் தங்களது சுப நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு ஏற்ப பூக்களை வாங்க பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story