திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
X
கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் கைது செய்து வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே குட்டியபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இப்ராஹிம் என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் இருக்கும் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ராஜா முகமது மகன் லத்தீப் மவுலானா(21), முஹம்மது இஸ்மாயில் மகன் ஷேக் அப்துல்லா(20), சம்சுதீன் மகன் முகமது இர்ஃபான்(21), காஜா நஜிமுதீன் மகன் கலித்(21) ஆகிய 4 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாலுகா காவல் துறையினர் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture