/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 21,149 பேர் விண்ணப்பம்

திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு 21,149 பேர் விண்ணப்பம்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 21,149 பேர் விண்ணப்பம்
X

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள் இடமாறுதல் தொடர்பாக கடந்த 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களுக்கு மக்கள் நேரில் சென்று விண்ணப்பித்தனர். மேலும் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,215 வாக்குச்சாவடிகளிலும் 6 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு 21 ஆயிரத்து 129 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதேபோல் பெயரை நீக்கம் செய்வதற்கு 5 ஆயிரத்து 42 பேரும், திருத்தம் செய்வதற்கு 3 ஆயிரத்து 494 பேரும், தொகுதிகள் இடமாற்றம் செய்வதற்கு 2 ஆயிரத்து 313 பேரும் விண்ணப்பம் செய்து உள்ளனர்.இதன்மூலம் மொத்தம் 31 ஆயிரத்து 978 பேர் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவுபெற்றதும் கள விசாரணை நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2021 2:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு