/* */

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் ரத விழா

புகழ்பெற்ற அருள்மிகு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் ரத விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் ரத விழா
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று பூத்த மலர் அலங்காரத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளான இன்று இன்று பூச்சொரிதல் ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.


இந்த வருடம் 51 ஆவது ஆண்டு விழாவாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் முருகன் விநாயகர் சரஸ்வதி லட்சுமி புல்லாங்குழல் கிருஷ்ணன் ஐயப்பன் விஸ்வரூப சிவலிங்கம் ஆகிய தெய்வங்களுடன் , அன்னை கோட்டை மாரியம்மன் லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு அம்மன் அலங்கார ரதம் 7 மலைகளுக்கு நடுவே காட்சி தரும் ஏழுமலையானின் திருவுருவ ரதமும் இடம்பெற்றது. கோலாட்டம் காவடியாட்டம் மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனை ஆங்காங்கே ஆயிரக்கணக்கான வண்ணப்பூக்கள் காத்திருந்த பக்தர்கள் வரவேற்று பூத்தூவி வழிபட்டனர்.



Updated On: 13 Feb 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது