/* */

விருத்தாசலத்தில் திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

விருத்தாசலத்தில் 21 வயது நிஷா என்ற திருநங்கைக்கு பெற்றோர்கள் செய்து வைத்த மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்
X

திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் நிஷா,இவர் தனது 16வயதில் இருந்தே தனது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் தான் திருநங்கையாக மாறவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும்,அதற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டை விட்டு வெளியேற்றிய நிஷா விடுதியில் தங்கிக்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தார்.பின்னர் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ஆபரேஷன் செய்துகொண்டார். பொதுவாக ஆபரேஷன் முடிந்து ஒரு வருடம் முடிந்த பிறகு மறு வருடம் அதே நாளில் திருநங்கைகள் சேர்ந்து சடங்கு செய்வது வழக்கம்.

ஆனால் நிஷாவின் பெற்றோர் பெண்களுக்கு செய்யும் மஞ்சள் நீராட்டுவிழா போல் நிஷாவிற்கு அலங்காரம் செய்து கொண்டாடினர். உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கம் விட்டார் என பலரும் கலந்து கொண்டனர்,இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2 March 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க