திட்டக்குடி அருகே லாரி மீது வேன் மோதியதில் கிளீனர் உடல் கருகி பலி
திட்டக்குடி அருகே லாரி மீது வேன் மோதி தீ பிடித்த விபத்தில் கிளீனர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகே சேலம் செல்லும் சாலையில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை ஓரம் பழுதடைந்து இரண்டு நாட்களாக நின்றது.
இந்நிலையில் விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி டெம்போ வேன் பழுதடைந்து நின்ற லாரியின் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக மோதியதில் மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது.
இதில் மினி டெம்போவில் இருந்த கிளினர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இன்னிலையில் சிறுபாக்கம் போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu