/* */

இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் தனியார் பேருந்து மோதி பலி

திட்டக்குடி அருகே தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர்  தனியார் பேருந்து மோதி பலி
X
3 பேரை பலி கொண்ட சாலை விபத்து.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி இவரது மனைவி செல்வராணி மற்றும் உறவினர் ஆறுமுகம், விஜய் நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்திலிருந்து மருதத்தூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது மேலூர் அருகே வளைவில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் கருப்புசாமி, ஆறுமுகம் இரண்டு பேரும் பலியானார்கள். கருப்புசாமி மனைவி செல்வராணி மற்றும் விஜய் பலத்த காயம் ஏற்பட்டு அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் விஜய் இறந்து விட்டார்.ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேப்பூர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 23 Feb 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!