திட்டக்குடியில் ஜேபி நாட்டா வாக்கு சேகரித்தார்

திட்டக்குடியில் ஜேபி  நாட்டா வாக்கு சேகரித்தார்
X
திட்டக்குடியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜேபி நாட்டா பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பெரியசாமி ஆதாரித்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில்.

உலகத்திற்கு வழிகாட்டி மொழியாக தமிழ் மொழி உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். 2g ஊழல் மற்றும் பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது. திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்று கூறினார்

காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஆனால் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரமான அதை மீட்டெடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது பாஜக தலைமையிலான அரசு என்றும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் மக்களின் பாதுகாவலராகவும் பிரதம மந்திரி உள்ளார் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக சர்வதேச எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பாதுகாவலானாக பாஜக விளங்குகிறது.

தமிழகத்திற்கு பாஜக அரசு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் அரசில் சிறிதளவு தொகையை ஒதுக்கீடு செய்தனர் என்று கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business