/* */

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு
X

அதிமுக சார்பில் திறக்கப்பட்டுள்ள நீர்மோர்ப் பந்தல்.

கடலூர் மாவட்டம், நல்லூர் மேற்கு ஒன்றியம், இறையூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் பொன்னேரி முத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

அதுபோல், திட்டக்குடியில் நகரக் கழகச் செயலாளர் அரங்க. நீதிமன்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ராமநத்தம் மற்றும் கல்லூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் வாகை. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதில், பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு