பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது

பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது
X
திட்டக்குடி அருகே பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை போகஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவர் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே இரவு விளையாடிக் கொண்டிருந்த பொழுது வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மனோஜ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்பொழுது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்த பொழுது சிறுவனை விட்டு விட்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூன்றுபேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மூன்று பேரில் மனோஜ் என்பவன் வடகராம்பூண்டி பகுதியில் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மனோஜை பிடித்த போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர், மனோஜ் மீது ஏற்கெனவே மூதாட்டியை கொலை செய்த வழக்கு கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?