/* */

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

பண்ருட்டி அருகே பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எம். ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன்.வயது 21, மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருக்கும் நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனையடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் வள்ளி வழக்குபதிவு செய்து மணிகண்டனை பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணையில் மணிகண்டன் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Dec 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்