/* */

போராட்டத்தில் ஈடுபட முயற்சி: ஊராட்சி தலைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சட்டசபை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்களுடன் 2-வது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

HIGHLIGHTS

போராட்டத்தில் ஈடுபட முயற்சி: ஊராட்சி தலைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
X

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணா கிராம ஒன்றிய 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 8 மாதமாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்காததை கண்டித்து சட்டசபை முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக செல்ல முயன்றனர்.

இதனை அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் உத்தரவுபடி, துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா,ஆய்வாளர்கள் சந்திரன், அசோகன், நந்த குமார், ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, வட்டாட்சியர் சிவா.கார்த்திகேயன் ஆகியோர் உறுதியளித்தனர்.

இதனால் சமாதானம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்களை மீண்டும் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பி.டி.ஒ.க்கள் சித்ரா, விஜயா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2022 4:20 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்