/* */

பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

HIGHLIGHTS

பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர்  முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
X

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ. பூவராகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் .பெ. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க மாணவர்களும், பொதுமக்களும் உறுதிமொழியை ஏற்றனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தில் வேல்முருகன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்ச்சி குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

நிகழ்வில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை கன்வீர் வீரப்பன், தலைமை ஆசிரியர் சீனுவாசன், கிருஷ்ணன், பென்னி, பாலு, ஆனந்த், விஸ்வா, நூர் முகமது , அன்பு தமிழரசன் மற்றும் , பொதுமக்கள் பலர் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வின் நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

Updated On: 12 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’