/* */

பண்ருட்டி அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி

பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

HIGHLIGHTS

பண்ருட்டி அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
X

மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9,10 ஆகிய வகுப்புகளில் சுமார் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்ததாகவும் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு உள்ளார்.

அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேஷ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவருடன் இருந்த 14 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் மருத்துவ குழுக்கள் விரைந்து சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை