/* */

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு

நெய்வேலியில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

HIGHLIGHTS

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு
X

கடலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக நெய்வேலி,குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பகுதிகளில் கொரோனா‌ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு. ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் 10-08-2021வரை (பால் மற்றும் மருந்து கடைகள் தவிர) அனைத்து கடைகளும் மாலை 5.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது என நெய்வேலி நகர வர்த்தக சங்க கூட்டமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர கட்டுப்பாட்டை அனைத்து வணிகர்களும் கடைபிடிக்கவும் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்வேலி நகரில் வணிகம் செய்யும் கடை உரிமையாளர் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக 10-08-2021ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Aug 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்