/* */

நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

கிராம மக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாக பாமகவினர் அறிவிப்பு.

HIGHLIGHTS

நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
X

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சிலம்பினாதன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பத்திரக்கோட்டை கிராமத்தில் டாஸ்மார்க் கடை திறப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுபான கடையின் முன்பு கிராம மக்கள் திரண்டு மதுபான கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்ட சூழ்நிலையில் கிராம மக்களுக்கு ஆதரவாக பாமகவினர் டாஸ்மாக் கடையை மூட வேண்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாமக மாவட்ட செயலாளர் சன். முத்துகிருஷ்ணன் கூறுகையில் இப்பகுதியில் மதுபான கடை வரக்கூடாது என கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததாகவும், தற்போது கிராம மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக மதுபான கடை மூடப்பட்டு இருப்பதாகவும், நிரந்தர தீர்வு வேண்டி கிராம மக்களை ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 3 Aug 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி