/* */

கடலூரில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

கடலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

HIGHLIGHTS

கடலூரில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்
X

கடலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் சானிடேஷன் பர்ஸ்ட் நிறுவன நிதியுதவியுடன் சி.எஸ். டி தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி அனைவருக்கும் முக கவசம், கை சுத்திகரிப்பான், போன்றவை கைகள் தொடாமல் கால்களை பயன்படுத்தி கைகழுவுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும்.

மேலும் கொரோனா விழிப்புணர்வு வாகனம் கிருஷ்ணாபுரம் வட்டாரத்தில் எல்லா கிராமங்களிலும் முகக்கவசம் அணிவது கைகளை சோப்புப்போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மூன்று மருத்துவமனைகளில் முகக்கவசம் 2000, கையுறை 5000 கிருமிநாசினி மற்றும் கருவி -30, கைதொடாமல் கைகழுவும் வசதி -15 மாதவிடாய்கால பராமரிப்பு பொருட்கள்-225, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் - 2 முதலியவை வழங்கப்பட்டது.

சானிடேஷன் பர்ஸ்ட் முதன்மை அலுவலர் பத்மப்ரியா மற்றும் சி.எஸ்.டி செயலாளர் ஆறுமுகம் அவர்களிடமிருந்து துணை இயக்குனர் சுகாதார பணிகள் கடலூர் மாவட்டம் செந்தில்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டு மருத்துவமனைகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மகேஸ்வரி,செவிலியர் கண்காணிப்பாளர் நிர்மலா சானிடேஷன் பர்ஸ்ட் நிஷா சி.எஸ். டி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

Updated On: 24 Jun 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...